சேலம், ஜூலை 16- சேலம் பெரியார் பல் கலை கழகத்தில் சாதிய ரீதியான வினாத்தாள் மாண வர்களுக்கு வழங்கப்பட் டதை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு நகல் எரித்து போராட்டம் நடைபெற் றது. இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற வினாத்தாள் எரிக் கும் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ். பவித்ரன் தலைமை தாங்கினார். இதில், இந் திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உத்தம் சிங், மாநகர துணைத் தலைவர் அரவிந்த் மற்றும் தாமரை கண்ணன் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்று பெரியார் பல்கலை கழக நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக இதுகுறித்து மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கூறுகையில், வினாதாள் வடிவமைப்பு முறைகளை எதுவும் பின்பற்றாமல் இந்த கேள்வி தாள் வடிவமைக் கப்பட்டுள்ளது. கேள்வி தாள் வடிவமைப்பு முறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அவர்களின் விவாத அறிவை வளர்க்கும் வகையிலும் கேள்விகள் அமைய வேண்டியது அவசியம்.
ஆனால் அந்த மாதிரியான கேள்விகள் ஒன்று கூட இதில் கேட்கப்படவில்லை. மாணவர்களின் புரிதலைக் குறித்த ஒரு வினா அவர்களின் மதிப்பிடும் அறிவை குறித்த வினா போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித் தான் வினாத்தாள்களை வடிவமைக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழக மானி யக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்தக் கேள்வி எதுவும் அப்படியாக அமைந்து இருக்கவில்லை என்பதும் பெரி யார் பல்கலைக்கழகம் வெளியிடக்கூடிய நிபந்தனைகள் எதுவும் இந்த வினாத்தாளில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வர லாற்றைச் சரியாக மாணவர்களிடம் எடுத்துக் கூறவேண்டிய பேராசிரியர்களே வரலாற் றைத் தவறான புரிதலுடன் கையாள்வது மன வருத்தத்தை அளித்துள்ளது. இதுபோக மாணவர்களிடம் சாதிய உணர்வை தூண்டு கிற கேள்வியை வினாத்தாளில் இடம்பெறச் செய்துள்ளது. ஏற்கனவே சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் தொடர்ந்து முறைகேடு கள் நடைபெறுவதும், சாதிய உணர்வுகள் மேலோங்கி இருப்பதையும் கண்டித்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழக அரசு உடனடியாக சம்பந்ப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.